விஜய் நடிப்பில் வெளியான நாளைய தீர்ப்பு திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 3 தசாப்தங்களில் நடிகர் விஜயின் சாதனைகள் குறித்த தொகுப்பு தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், ரஜினிகாந்த் வரிசையில் யாரும் சாத்தியப்படுத்த முடியாத ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தை தன்னகத்தே ஈர்த்து வைத்திருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். விஜய்க்கு ஒரு சிக்கல் என்றவுடன் நெய்வேலியில் கூடிய கூட்டமும் அண்மையில் விஜயை சந்திக்க பனையூரில் கூடிய கூட்டமும் விஜயின் உழைப்புக்கு கிடைத்த பரிசு. இந்த வெற்றி நடிகர் விஜய்க்கு அவ்வளவு எளிதில் சாத்தியமாக்கி விடவில்லை. இப்படிப்பட்ட ஒரு உச்ச வெற்றியை ருசிக்க நடிகர் விஜய்க்கு மூன்று தசாப்தங்கள் ஆகியிருக்கிறது. எஸ் ஏ சந்திரசேகரின் மகன் என்ற காரணத்தால் தமிழ் சினிமாவிற்குள் மிக எளிதாக நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு, விஜய்க்கு கிடைத்துவிட்டது. ஆனால் விஜய் ஒரு நடிகனாக தமிழ் சினிமா ஏற்றுக்கொள்ள சுமார் ஆறு ஆண்டுகள் போராட வேண்டி இருந்தது. முதல் படம் வெளியான போது இந்த முகத்தை காசு கொடுத்து பார்க்க வேண்டுமா என விமர்சித்தன சில வார இதழ்கள். ஆனால் விஜய் ஒரு நடிகனாக தமிழ் சினிமா ஏற்றுக்கொள்ள சுமார் ஆறு ஆண்டுகள் போராட வேண்டி இருந்தது. முதல் படம் வெளியான போது இந்த முகத்தை காசு கொடுத்து பார்க்க வேண்டுமா என விமர்சித்தன சில வார இதழ்கள். விக்ரமன் இயக்கத்தில் பூவே உனக்காக திரைப்படம் வெளியான பிறகு விஜயின் சினிமா கேரியர் உயரத் தொடங்கியது. பாசில் இயக்கத்தில் காதலுக்கு மரியாதை தந்த வெற்றி மக்கள் மத்தியில் தனி இடத்தைப் விஜய்க்கு பெற்றுக் கொடுத்தது. ஆனால், விஜய் மனதில் நினைத்த இடத்தை சினிமாவில் அவருக்கு பெற்றுக் கொடுத்த திரைப்படம் கில்லி. இதன் பிறகு தனது பயணம் கமர்சியலாக ரசிகர்களை திருப்திப்படுத்த இருக்க வேண்டுமென திட்டமிட்ட விஜய் அடுத்த 30 திரைப்படங்களையும் பார்த்து பார்த்து செதுக்கினார். ரசிகர்கள் கொண்டாட ஒரு திரைப்படத்தில் என்ன இருக்கிறது என்பதை கவனத்துடன் தேர்வு செய்து விஜய் நடிப்பதாலேயே ஒவ்வொரு திரைப்படத்திலும் அவருக்கான வெற்றி சாத்தியப்படுகிறது. கோவிட் காலகட்டத்தில் இனி திரையரங்கிற்கு ரசிகர்கள் திரைப்படத்தை பார்க்க வருவார்களா என்று கேள்வி எழ விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் கூட்டம் கூட்டமாக ரசிகர்களை திரையரங்கிற்குள் மீண்டும் வரவழைத்து தமிழ் சினிமாவிற்கு நம்பிக்கை அளித்தது. பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வர்த்தக ரீதியில் வெற்றி பெற்றது விஜய் திரைப்படங்கள் தயாரிப்பாளரை நஷ்டப்படுத்தாது என்ற நம்பிக்கையை தமிழ் சினிமாவிற்கு உருவாக்கி உள்ளது. ஒரு நாயகனாக மூன்று தசாப்தங்கள் போராடி மக்களின் பெரும் நம்பிக்கையையும் தயாரிப்பாளர்களின் ஆதர்ச நடிகராகவும் மாறி இருக்கும் விஜய், தமிழ் சினிமாவின் ஆகப்பெரும் கொண்டாட்டம் என்பதை மறுப்பதற்கில்லை.