பிரபல இயக்குநர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு
சர்ச்சை இயக்குநர் ராம்கோபால் வர்மா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தெலங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இயக்குநர் ராம்கோபால் வர்மா
- News18 Tamil
- Last Updated: July 5, 2020, 7:30 PM IST
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிர்யலாகுடா பகுதியைச் சேர்ந்தவர் பிரனய் குமார் (வயது 22). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் மாருதி ராவ் மகள் அம்ருதாவும் காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்,
பிரனய் குமார் வேறு சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் காதலிக்கும் போதே கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த மாருதி ராவ் இருவரும் திருமணம் செய்து கொண்டதை அறிந்து கடும் அதிர்ச்சியடைந்து தொடர்ந்து பிரனயை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அம்ருதா கர்ப்பம் தரித்திருப்பதை அறிந்து கொண்ட மாருதிராவ் கடும் கோபத்துக்குள்ளானார். அம்ருதா தன் கணவருடன் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்று வெளியே வந்த போது, பிரணய் குமாரை 3 பேர் கொண்ட கும்பல் வெட்டிச் சாய்த்தது. இதில் சம்பவ இடத்திலேயே பிரனய் குமார் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தெலங்கானாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்குக் காரணமான அம்ருதாவின் தந்தை மாருதி ராவும் அவரது தம்பியும் கைது செய்யப்பட்டனர். ஆணவ கொலை செய்யப்பட்ட பிரணாயின் கதையை மையமாக வைத்து மர்டர் என்ற படத்தை எடுக்க உள்ளதாகவும், பிரணாயின் மனைவி அம்ருதா, மற்றும் ஆணவ கொலைக்கு காரணமாக கருதப்படும் அவரது தந்தை மாருதி ராவ் ஆகியோரை அடிப்படையாக வைத்து கதை இருக்கும் என்றும் பர்ஸ்ட் லுக்கை ராம் கோபால் வர்மா வெளியிட்டார்.
இந்த சூழலில், பிரணய் மற்றும் அம்ருதா ஆகியோரின் புகைப்படங்களை பயன்படுத்துவது தொடர்பாக தங்களிடம் அனுமதி வாங்கவில்லை எனக்கூறி படத்திற்கு தடைக்கோரி பிரணயின் தந்தை பாலசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ராம்கோபால் வர்மா மற்றும் படத்தின் தயாரிப்பாளர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரனய் குமார் வேறு சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் காதலிக்கும் போதே கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த மாருதி ராவ் இருவரும் திருமணம் செய்து கொண்டதை அறிந்து கடும் அதிர்ச்சியடைந்து தொடர்ந்து பிரனயை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அம்ருதா கர்ப்பம் தரித்திருப்பதை அறிந்து கொண்ட மாருதிராவ் கடும் கோபத்துக்குள்ளானார். அம்ருதா தன் கணவருடன் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்று வெளியே வந்த போது, பிரணய் குமாரை 3 பேர் கொண்ட கும்பல் வெட்டிச் சாய்த்தது. இதில் சம்பவ இடத்திலேயே பிரனய் குமார் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தெலங்கானாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்குக் காரணமான அம்ருதாவின் தந்தை மாருதி ராவும் அவரது தம்பியும் கைது செய்யப்பட்டனர்.
With regard to media speculations on the case filed on my film MURDER ,I once again want to reiterate that my film is based and inspired from a true incident and it is not the truth ..Also there’s no mention of anyone’s caste in the film pic.twitter.com/apiT6rKJDn
— Ram Gopal Varma (@RGVzoomin) July 5, 2020
இந்த சூழலில், பிரணய் மற்றும் அம்ருதா ஆகியோரின் புகைப்படங்களை பயன்படுத்துவது தொடர்பாக தங்களிடம் அனுமதி வாங்கவில்லை எனக்கூறி படத்திற்கு தடைக்கோரி பிரணயின் தந்தை பாலசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ராம்கோபால் வர்மா மற்றும் படத்தின் தயாரிப்பாளர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.