தண்ணீர் என்பதில் ஏழை, பணக்காரன் என்கிற பாகுபாடு இல்லாமல் குழாயைத் திறந்தால் அனைவருக்கும் குடிக்க தண்ணீர் கிடைக்க வேண்டும் என்று இசைமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் சார்பில், தண்ணீரின் அவசியம், சேமிப்பு, பாதுகாப்பு அம்சங்கள் குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் இன்று துவக்கப்பட்டது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஏ,ஆர் ரகுமான் தண்ணீர் என்பது அடிப்படை என்று கூறிய அவர் இதனை பெறுவதற்கு அனைவரும் ஒன்றினைய வேண்டும் என்று கூறினார்.
அமெரிக்க துணை தூதர் ராபர்ட் பர்கீஸ், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்
மேலும், தண்ணீர் குறித்த விழிப்புணர்வுக்கான பாடல் ஒன்றை விரைவில் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட உள்ளார்.
குழாய் திறந்தால் அனைவருக்கும் தண்ணீர் கிடைக்க வேண்டும். ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு கூடாது என்று தெரிவித்தார். இந்நிகழ்சியில் அமெரிக்க துணை தூதர் ராபர்ட் பர்கீஸ், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.