மாஸ்டர் படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யின் 65-வது படத்தை இயக்க இருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால் சன் பிக்சர்ஸ் உடனான கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் படத்திலிருந்து விலகி விட்டார். இதையடுத்து விஜய்யின் அடுத்த படத்தை ‘டாக்டர்’ பட இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் படத்திலிருந்து விலகிய ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு படங்களை தயாரித்து வந்த ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது அந்நிறுவனத்துக்கு நேரடியாக படம் இயக்க இருக்கிறார். அதற்கான பணிகளில் அவர் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. கமர்ஷியல் ஹிட் இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு படம் இயக்குகிறார் என்றால் அதில் முன்னணி நடிகர்கள் நடிப்பார்கள் என்று தான் அனைவரும் நினைப்பார்கள். இம்முறை அதிலேயே ட்விஸ்ட் வைத்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
அவர் இயக்க உள்ள அடுத்த படம் லைவ் ஆக்ஷன் ஸ்டைலில் உருவாக்கப்படும் அனிமேஷன் என்று கூறப்படுகிறது. இது அவரது இயக்கத்திலும் தமிழ் சினிமாவிலும் ஒரு புதுமுயற்சி.
இத்திரைப்படத்தை பல்வேறு மொழிகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.