தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப் 4 முடிவுகளை 7 மாதங்கள் ஆகியும் வெளியிடப்படாமல் தாமதமாகும் நிலையில் உடனே முடிவுகளை வெளியிடக்கோரி தேர்வர்கள் சமூக வலைதளமான ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7301 காலிப்பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டு ஜூலை மாதம் 24 ஆம் நாள் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் அக்டோபர் மாதமே வெளியாக வேண்டிய முடிவுகள் 7 மாதங்கள் ஆகியும் வெளியிடப்படாமல் தாமதம் ஆகிக்கொண்டு இருக்கிறது. சுமார் 18 லட்சம் தேர்வர்கள் குரூப் 4 தேர்வை எழுதி காத்துக்கொண்டு இருக்கும் நிலையில், மார்ச் மாதத்தில் முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், லட்சக்கணக்கான தேர்வர்கள் சமூக வலைத்தளமான ட்விட்டரில் குரூப் 4 தேர்வு முடிவுகளை உடனே வெளியிடுக என பதிவிட்டு வருகின்றனர். அதேபோல் #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக்கில் ரிசல்ட் தொடர்பாக தேர்வாணையத்தை டேக் செய்து கேள்வி எழுப்பி வருகின்றனர். டிஎன்பிஎஸ்சி தொடர்பான மீம்ஸ்களும் இந்த ஹேஷ்டேக்கில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ட்விட்டரில் #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி கொண்டு வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.