குரூப் 1, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறுமா என்று தேர்வர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில், டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்த குரூப் 1 தேர்வு, குரூப் 2 தேர்வு, குரூப் 2ஏ தேர்வு, குரூப் 4 தேர்வு ஆகியவை கொரோனா தாக்கம் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், சூழல் சரியானவுடன் தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் என்றும், நந்தகுமார் தெரிவித்தார். இதனால் தேர்வர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்று நந்தகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், தேர்வு நடப்பதற்கு முன்பாக 3 மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும் குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்கு இடையேயும் போதிய கால இடைவெளி வழங்கப்படும் என்றும் நந்தகுமார் உறுதியளித்துள்ளார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.