முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / TNPSC Recruitment: டிஎன்பிஎஸ்சி 1089 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது

TNPSC Recruitment: டிஎன்பிஎஸ்சி 1089 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது

டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி

நில அளவர்/வரைவாளர்  பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 01.07.2022 அன்று, 32 -க்கு கீழ் இருக்க வேண்டும். 

  • Last Updated :
  • Chennai, India

நில அளவர், வரைவாளர், அளவர்/உதவி வரைவாளர் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்: 1089

பதவியின் பெயர்பணியின் பெயர் மற்றும் பணிக்குறியீடுகாலிப் பணியிடங்களின் எண்ணிக்கைசம்பளம்
நில அளவர்நில அளவைப் பதிவேடுகள் சார்நிலைப் பணி794 +4 (முன் கொணரப்பட்ட காலிப் பணியிடங்கள் )ரூ.19500-71900/
வரைவாளர்நில அளவைப் பதிவேடுகள் சார்நிலைப் பணி236ரூ.19500-71900/
அளவர்/ உதவி வரைவாளர்தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணி55ரூ.19500-71900/

முக்கியமான நாட்கள்: 

அறிவிக்கை வெளியிடப்பட்ட நாள்: 29.07.2022

விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய இறுதி நாள்: 24.08.2022

கணினி வழி தேர்வு நடைபெறும் நாள் : 06.11.2022

கல்வித் தகுதி:  சிவில் இன்ஜினியரிங் பட்டயப் படிப்புகள் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

(அல்லது)

சம்மந்தப்பட்ட தொழிற் துறைகளில் (Surveyor, Draftsman) தேசிய தொழிற் பயிற்சி கவுன்சிலால் சான்றிதழ்  பெற்றவர்கள் இதற்கு  விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு:

நில அளவர்/வரைவாளர்  பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 01.07.2022 அன்று, 32 -க்கு கீழ் இருக்க வேண்டும்  .

தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப்  பணியின் கீழுள்ள  அளவர்/ உதவி வரைவாளர்  பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 01.07.2022 அன்று, 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர்அருந்ததியர் , பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பினர், சீர்மரபினர், அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகிய பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக் கட்டணம்: ரூ. 100; நிரந்தர பதிவுக் கட்டணம் : ரூ.150

ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள்/ஆதரவற்ற விதவைகள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பதாரர் நிர்ணயக்கப்பட்ட தேர்வுக் கட்டணத்துடன் குறித்த நேரத்திற்குள் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கவில்லை என்றால், விண்ணப்பம் உரிய நடைமுறைகளுக்குப் பிறகு நிராகரிக்கப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்க:  கடந்த 7 ஆண்டுகளில் மத்திய அரசுப் பணிகளில் நியமன விகிதம் 0.3% மட்டுமே - மத்திய அமைச்சர் ஜிக்கேந்திர சிங்

தேர்வுத் திட்டம்:  எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.    இடஒதுக்கீட்டு விதி பின்பற்றப்படும்.அதேபோன்று ,  26.12.2017-ன் படி, மாற்றுத் திறனாளிகளுக்கென வகைப்படுத்தப்பட இனங்களுக்கு 4% இடஒதுக்கீடு இத்தேர்வுக்கு பொருந்தும்.

top videos

    விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

    First published:

    Tags: TNPSC