டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கான அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளது. என்னென்ன பணியிடங்கள் குரூப் 4 பதவியின் கீழ் வருகின்றன என்பதை காண்போம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பணிகள் பெரும்பாலானவற்றுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. குரூப் -1, குரூப் -2, குரூப் -4 என்ற பிரிவின் கீழ் நடத்தப்படும் தேர்வுகளில் பல லட்சம் போட்டி தேர்வுகள் விண்ணப்பிப்பதில் இருந்தே அரசு பணிகளுக்கு இளைஞர்களிடையே இருக்கும் மோகம் குறித்து நாம் அறிந்துகொள்ள முடியும்.
5,831 காலி பணியிடங்களை கொண்ட குரூப் 2 தேர்வு மே மாதம் 21ம் நடைபெறவுள்ளது. இதற்கு டிகிரி படிப்பு முக்கியம் என்பதால் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு படித்தவர்களின் குறிக்கோளாக குரூப் 4 தேர்வு உள்ளது. இதற்கான தகுதி 10ம் வகுப்பு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. குரூப் 4 தேர்வு தொடர்பான காலி பணியிடங்கள், தேர்வு தேதி ஆகியவை நாளை அறிவிக்கப்படவுள்ளது.
குரூப் 4 பணியிடங்கள்:
முன்பு குரூப் 4 பணியிடங்களுக்கும் வி.ஏ.ஓ. எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கும் தனித் தனியாக தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. பின்னர் இவற்றை ஒருங்கிணைத்து ஒருங்கிணைந்த சிவிஸ் சர்விசஸ் தேர்வு - 4 (Group 4) தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ), டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
இதையும் படிங்க: JOB : வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.?
கடைசியாக கடந்த 2019ம் ஆண்டில் 9 ஆயிரத்து சொச்சம் பதவிகளுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற்றது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகள் தேர்வு நடைபெறவில்லை. நாளை தேர்வு அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், இம்முறையும் காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் என்பது தேர்வர்களின் எண்ணமாக உள்ளது.
ஊதியம்:
ஸ்டெனோ டைபிஸ்ட் பணியிடத்துக்கு 20,600-65,500 என்ற ஊதிய முறையும் பிற பணியிடங்களுக்கு 19,500-62,000 என்ற ஊதிய முறையும் கடந்த 2019 ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.