ஒருங்கிணைந்த குரூப்1 முதன்மை எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. மார்ச் 4, 5 , 6 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தேர்வு முடிவுகளை TNPSC வெளியிட்டுள்ளது.
துணை ஆட்சியர், காவல் துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் உள்ளிட்ட பதவிகளில் 66 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, முதன்மைத் தேர்வுக்கு 3,800 பேர் தேர்வுசெய்யப்பட்ட நிலையில், மே 4,5,6ஆகிய 3 நாட்களுக்கு இந்தத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு நடத்தி முடிக்கப்பட்டத.
ALSO READ | சிபிஎஸ்இ 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது? முக்கிய அப்டேட் இங்கே
தமிழகம் முழுவதும் முதன்மை தேர்வில் சுமார் 1லட்சத்து ,31,701 பேர் எழுதியது குறிப்பிடத்தக்கது . முன்னதாக முதன்மைத் தேர்வுகள் மே 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக இத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது
தற்போது இதன் முடிவுகள் வெளியாகியுள்ளது.
137 பேர் அடுத்த கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் ஜூலை 13,14,15ம் தேதிகளில் Oral test நடத்தப்படும். அன்று தேர்வர்கள் தங்கள் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.