அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு இன்று முதக் பிப்ரவரி 12 -ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து செம்படம்பர் மாதம் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 568 பேர் தேர்வு எழுதினர். அதைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடந்த நிலையில் , விடைத்தாள் மதிபீட்டின்போது முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. பின் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர தீர்ப்பின் படி 1,060 பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியானது. அதற்குறிய விண்ணப்ப அறிவிப்பே தற்போது வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஆசியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் காலி பணியிடங்களுக்குத் தகுதியானவர்களை தேர்வு செய்ய கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. இப்பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் ஜனவரி 22 (இன்று) முதல் விண்னப்பத்தை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யலாம். மேலும் பிப்ரவரி 12 தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்கள், சான்றிதழ்களையும் தவறாமல் பதிவேற்ற வேண்டும். தேர்வு அட்டவணை இறுதி நிலையில் உள்ளதால் எக்காரணம் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது “ இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் சென்று தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Published by:Sivaranjani E
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.