பிராந்திய ஊரக வங்கிகளில் காலியாக உள்ள 8,285 பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை இன்றுடன் முடிவடைகிறது. எனவே, விண்ணப்பதாரர்கள் கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் வடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
முன்னதாக, பிராந்திய ஊரக வங்கிகளுக்கான அலுவலக உதவியாளர், அலுவலர் நிலை 1 பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை IBPS அமைப்பு வெளியிட்டது.
மொத்த காலியிடங்கள்: 8,285
வயதுக்கான தகுதிகள்:
அலுவலக உதவியாளர் (பல்துறை பணி) : இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.06.2022 அன்று 28-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
அலுவலர் நிலை 1 (துணை மேலாளர்)- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.06.2022 அன்று 30-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
அலுவலர் நிலை 2 (மேலாளர்) : இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.06.2022 அன்று 32-க்கு கீழும், 21-க்கு மேலும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
அலுவலர் நிலை 3 (மூத்த மேலாளர்) : இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.06.2022 அன்று 40-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.
இதையும் வாசிக்க: பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்வது எப்படி?
கல்வித் தகுதி: அலுவலக உதவியாளர் பல்துறை பணிகளுக்கும் , அலுவலர் நிலை 1பணிகளுக்கும் ஏதேனும் துறைகளில் இளநிலை (Bachelor Degree) பட்டம் பெற்றிருக்க வேண்டும். நிலை 1 பதிவிகளுக்கு கால்நடை பராமரிப்பு, வேளாண், வேளாண் பொறியியல், பொருளாதாரம் ஆகிய துறைகளில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது: முதலில் ibps.in என்கிற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் செல்ல வேண்டும்.
“Click here to apply online for CRP RRBs-XI” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்யவும்.
பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, அந்த பக்கத்தை சமர்ப்பிக்கவும்.
எதிர்கால பயன்பாட்டிற்காக இந்த படிவத்தின் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.
இதையும் வாசிக்க:
சிபிஎஸ்இ 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது? முக்கிய அப்டேட் இங்கே
விண்ணப்பிக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.850ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், ரூ.175 ஐ விண்ணப்பிக்க கட்டணமாக செலுத்த வேண்டும்.
தெரிவு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். பொது விழிப்புணர்வு (General Awareness), பிரச்னை தீர்க்கும் ஆற்றல் (Problem Solving ability), காரணங்கானல் (Logical Reasoning), ஆங்கில மொழித்திறன் மற்றும் தொடர்பாடல் ஆற்றல் (English Language and Comprehension) ஆகிய நான்கு கூறுகளைக் கொண்டதாக உள்ளது. சிறியளவு பயிற்சி இருந்தால் கூட வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் வாசிக்க: ப்ளஸ் 2 தொழிற்கல்வி மாணவ, மாணவிகளுக்கு பொறியியல் சேர்க்கையில் 2 சதவீத இடஒதுக்கீடு- அமைச்சர் பொன்முடி
பிராந்திய மொழிகளில் தேர்வு: உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதில் சம வாய்ப்பை உருவாக்கும் நோக்கில், பிராந்திய ஊரக வங்கிகளுக்கான அலுவலக உதவியாளர், அலுவலர் நிலை 1 ஆகிய பணிகளுக்கான தேர்வை கொங்கனி மற்றும் கன்னடம் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என்று 2019-ம் ஆண்டு அரசு முடிவெடுத்தது. அப்போதிலிருந்து பிராந்திய மொழிகளிலும் மேற்கண்ட தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
Recruitment of Officers (Scale-I, II & III) and Office Assistants (Multipurpose) in Regional Rural Banksஉலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.