முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / நர்சிங் ஆபீசர் ஆள்சேர்ப்பு தேர்வு : எய்ம்ஸ் முக்கிய அறிவிப்பு

நர்சிங் ஆபீசர் ஆள்சேர்ப்பு தேர்வு : எய்ம்ஸ் முக்கிய அறிவிப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

Nursing Officer Recruitment Common Eligibility Test: நர்சிங் ஆபீசர் ஆள்சேர்ப்பு பொது திறன் தேர்வு (NORCET) செப்டமபர் 11 அன்று நடைபெறும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

புதுடெல்லி, குவகாத்தி  என நாட்டில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளிலும், தேசிய காசநோய் நிறுவனத்திலும்  செவிலியர் அதிகாரிகள் (Nursing Officer, Staff Nurse Grade- II) பதவிகளுக்கான NORCET எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பபங்கள் வரவேற்கப்படுகின்றன.

முக்கியமான நாட்கள்:

இணைய வழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய காலம் :04.08.2022  முதல்  21.08.2022  (மாலை 5 மணி வரை)

நர்சிங் ஆபீசர் ஆள்சேர்ப்பு பொது திறன் தேர்வு (NORCET) 2022 நடைபெறும் நாள்: 11.09.2022

யார் விண்ணப்பிக்கலாம்: 

இரண்டு வகையான அத்தியாவசிய தகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. நர்சிங் தொடர்புடைய படிப்புகளில் பி.எஸ்சி முடித்தவர்கள் பணி அனுபவம் இல்லாமல் விண்ணப்பிக்கலாம். இரண்டவதாக,  குறிப்பிடப்பட்ட படிப்புகளில் டிப்ளமோ முடித்தவர்கள், இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

முதலாவது:   

பல்கலைக்கழகம் அல்லது மாநில நர்சிங் கவுன்சில் அங்கீகரிக்கப்பட்ட இன்ஸ்ட்டியூட் / இந்தியன் நர்சிங் கவுன்சில்-லிருந்து B.Sc Nursing / B.Sc (Hons) Nursing

(அல்லது)

பல்கலைக்கழகம் / மாநில நர்சிங் கவுன்சில் அங்கீகரிக்கப்பட்ட இன்ஸ்ட்டியூட்/இந்தியன் நர்சிங் கவுன்சில் - லிருந்து  B.sc. (Post  Certificate)/ Post-Basic B.Sc. Nursing

b. மாநில / இந்தியன் நர்சிங் கவுன்சில் உடன் மருத்துவ பணிப்பெண் மற்றும் செவிலியராக பதிவு செய்திருத்தல்.

இரண்டாவது:

போர்டு அல்லது கவுன்சில் / மாநில நர்சிங் கவுன்சில் அங்கீகரிக்கப்பட்ட இன்ஸ்ட்டியூட் / இந்தியன் நர்சிங் கவுன்சில் -லிருந்து பொது செவிலியர் மருத்துவ பணிப்பெண்-ல் டிப்ளமோ (Diploma in General Nursing midwifery)

மாநில இந்திய நர்சிங் கவுன்சிலில் செவிலியர் மற்றும் மருத்துவ பணிப்பெண் - ஆக பதிவு செய்தல்

மேலே, குறிப்பிட்ட கல்வி தகுதியை பெற்ற பிறகு குறைந்தபட்சம் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் இரண்டு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விகிதம்: ரூ.9300 முதல் ரூ. 34800 வரை (சம்பள ஏற்ற நிலை 7)

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான,விண்ணப்பக் கட்டணம் ரூ.3000ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் ரூ.2400 ஐ விண்ணப்பிக்க கட்டணமாக செலுத்த வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விலக்கு பெறுகிறார்கள்.

இதையும் வாசிக்க:  மருத்துவம் சார்ந்த படிப்புகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - மருத்துவக் கல்வி இயக்ககம்

வயது வரம்பு:

தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 21.08.2022 அன்று 18-30-க்கு இடையில் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.

எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர். எவ்வாறாயினும், ஒதுக்கப்படாத இடங்களுக்கு போட்டியிடும் எஸ்சி/எஸ்டி/ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு தளர்வு அளிக்கப்படாது.  

அவ்வப்போதைய நிலவரங்களை aiimsexams.ac.in என்ற இணையதளத்தில் பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Nursing Officer Recruitment Common Eligibility Test (NORCET) 2022

First published:

Tags: AIIMS, Nursing