இன்ஜினியரிங் கல்விக்குப் பெயர்போன ஐஐடி-க்கு அடுத்த நிலையில் என்ஐடி (NIT) எனப்படும் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு நாட்டின் பல்வேறு இடங்களில் கிளைகள் இருக்கின்றன.
ஹரியானா மாநிலம், குருக்ஷேத்திரா நகரிலுள்ள என்ஐடி-ல் தொழில்நுட்ப அதிகாரி, சூப்பிரன்டன்ட், அக்கவுன்டன்ட் உள்ளிட்ட 65 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்கள் 15 பிரிவுகளாக பிரித்து ஒதுக்கப்பட்டுள்ளன.
வயதுவரம்பு: விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ப வயதுவரம்பு மாறுபடும். எனினும், குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.
கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ப கல்வித் தகுதி
மாறுபடும். அந்தந்தப் பணிக்கு தேவையான கல்வித் தகுதியை வலைதளத்தில் பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினரும், ஓபிசி பிரிவினரும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினரும், மாற்றுத் திறனாளிகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
கடைசி தேதி: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 14. தேர்வு முறை, ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களுக்கு
https://nit.thinkexam.com/document/PDF/DetailedAdvertisementNo.41.2018.pdf,
https://nit.thinkexam.com/ ஆகிய வலைதளங்களைப் பார்க்கவும்.
Also watch
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.