முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / மத்திய அரசு உர நிறுவனத்தில் அதிகாரி பணியிடங்கள்!

மத்திய அரசு உர நிறுவனத்தில் அதிகாரி பணியிடங்கள்!

என்எஃப்எல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

என்எஃப்எல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

அக்கவுன்ட்ஸ் ஆபிஸர் பணிக்கு விண்ணப்பிப்போர் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சீனியர் மேனேஜர் பணிக்கு விண்ணப்பிப்போர் 48 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

  • 1-MIN READ
  • Last Updated :

மத்திய அரசின் கீழ் இயங்கும் நேஷனல் ஃபெர்டிலைஸர்ஸ் லிமிடெட் (National Fertilizers Limited) நிறுவனத்தில் 42 அதிகாரி பணியிடங்கள் காலியாகவுள்ளன. இதில் 40 இடங்கள் அக்கவுன்ட்ஸ் ஆபிஸர் பணிக்கும், 2 இடங்கள் சீனியர் மேனேஜர் பணிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

வயதுவரம்பு: அக்கவுன்ட்ஸ் ஆபிஸர் பணிக்கு விண்ணப்பிப்போர் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சீனியர் மேனேஜர் பணிக்கு விண்ணப்பிப்போர் 48 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எனினும், குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கல்வித் தகுதி: எம்.பி.ஏ., ஐ.சி.ஏ.ஐ., காஸ்ட் மேனேஜ்மென்ட் அக்கவுன்டன்ட் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: அக்கவுன்ட்ஸ் ஆபிஸர் பணிக்கு விண்ணப்பிப்போர் ரூ. 700-ம், சீனியர் மேனேஜர் பணிக்கு விண்ணப்பிப்போர் ரூ. 1000-ம் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். எனினும், குறிப்பிட்ட பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

கடைசி தேதி: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 14. தேர்வு முறை, ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களுக்கு http://www.nationalfertilizers.com/images/pdf/career/noida/ADVERTISEMENT%20-%2015112018.pdf, http://www.nationalfertilizers.com/ ஆகிய வலைதளங்களைப் பார்க்கவும்.

Also watch

First published:

Tags: National fertilizers