2011 இந்திய சனத்தொகை கணக்கெடுப்பின் படி, இந்திய மக்கள் தொகையில் 8.5% பேர் (10.3 கோடி) அறுபது வயதுக்கும் மேலானவர்கள் ஆவர். 2021ல் இந்த எண்ணிக்கை 13.8 கோடியாக உள்ளது (ELDERLY in INDIA 2021). 2050ல் இந்த எண்ணக்கை 25 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், 2021ல் 1.04 கோடியாக உள்ள மூத்த குடிமக்களின் மக்கள் தொகை, 2031ல் 1.42 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது. 2031ல் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில், 18.2% பேர் 60 வயதைக் கடந்த மூத்த குடிமக்கள் ஆவர்.
இதற்கிடையே, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட நீண்ட முதுமை பற்றிய ஆய்வறிக்கையில், (Longitudinal Ageing Study of India (LASI) Wave-1) , முதியவர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஏதாவது ஒரு நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 சதவீதம் பேருக்கு உடல் ஊனம் உள்ளது, 20 சதவீதம் பேருக்கு மன நல சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்தது.
வாழ்வாதார சூழல்:
இன்றைய சமகால பின்னணியில், பல்வேறு வகையான உரிமை மறுப்புகளையும், அடக்கு முறைகளையும், வாழ்க்கை பேதங்களை மூத்த குடிமக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். மாநிலத்தில் முதுமை அடைந்த பெண்களில் நான்கில் ஒருவர், தனிமையில் வாழ்வாதாக கூறப்படுகிறது. (The Status of Elderly in Tamil Nadu, 2011). மற்ற மாநிலங்களை விட, தமிழ்நாட்டில் ஆண்களை விட பெண் முதியவர்களே தனிமையில் வாழ்வதற்கான (கணவன் அற்ற நிலை, தனித்து விடப்படல், அனாதைகளாதல்) வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோன்று, தமிழ்நாட்டில் 24% மூத்த குடிமக்கள் தீவிர வறுமைக் கோட்டின் (ரூ. 38 ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ) கீழ் உள்ளனர் ( Long Panel Survey on Socio Economic Status of Elderly Population in
Tamil Nadu). மூத்த குடிமக்களில் 30% மட்டுமே முதியோர் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்துள்ளனர் என்றும், 16% மூத்த குடிமக்கள் மட்டுமே ஓய்வூதியம் பெறுகின்றனர் என்றும் இவ்வாய்வு தெரிவிக்கிறது .
வேலைவாய்ப்பு:
தமிழ்நாட்டில் 60 வயதைக் கடந்த 4ல் ஒரு மூத்தக் குடிமகனும், 80 வயதைக் கடந்த 10ல் 1 மூத்தக் குடிமகனும் உழைப்புச் சந்தையில் இருக்கலாம் என்று மதிப்படப்படுகிறது. நகர்ப்புறங்களை விட கிராம புறங்களில் வாழும் முதியவர்கள் உழைப்பில் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம், கல்வி அறிவு பெறாத, மிகவும் பிறப்படுத்தப்பட்ட/ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த முதியவர்களே வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், யாரும் தங்கள் சொந்த அபிப்பிராயங்கள் அடிப்படையில் வேலையில் ஈடுபடவில்லை என்பதையும் இங்கு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். அரசியல், சமூக, பொருளாதார காரணங்களே இதற்கு முக்கிய காரணமாகும்.
SACRED PORTAL:
இந்த சூழலில் தான், வேலை வாய்ப்புகளை தேடும் மூத்த குடிமக்களை வேலை வழங்குபவர்களுடன் இணைக்கும் சேக்ரட் (SACRED) இணையதளத்தை மத்திய அரசு தொடங்கியது. இந்த தளத்தில், 01.08.2022 வரை 4527 முதியவர்கள் பதிவு செய்துள்ளனர். இதில், வேலைக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை வெறும் 63 ஆகும். தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, 286 முதியவர்கள் பதிவு செய்துள்ளனர், 5 பேர் எதேனும் ஒரு பணிக்கு விண்ணப்பித்துள்ளனர்.
முதியவர்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்துவதில், SACRED PORTAL ஒரு தொடக்கமே ஆகும். ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் முதியவர்களின் வேலைவாய்ப்புத் திறன்களை அங்கீகரித்து/அடையாளப்படுத்து வருகின்றன. மாறிவரும் தொழில்நுட்ப சூழலுக்கு ஏற்ப திறன் பயிற்சியை அளிப்பது, திறனை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு அளிப்பது, முதியவர்களை பணி அமர்த்தும் நிறுவனங்களுக்கு சலுகை அளிப்பது, விழிப்புணர்வை உருவாக்குவது, தடைகளை களைவது போன்ற நடவடிக்கைகளை மத்திய/மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் நிலவுகிறது.
இதையும் வாசிக்க: நாட்டில் புதிய வேலைவாய்ப்பு குறைகிறதா... தரவுகள் சொல்வது என்ன?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jobs