வனப்பாதுகாவலர் மற்றும் இணை வனப்பாதுகாவலர் ஆகிய பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான இந்திய சபை (ஐ.சி.எப்.ஆர்.இ.) வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள்: 45
தேர்வு செய்யும் பணி: அயல்பணி அடிப்படையில் (Deputation Basis) தேர்வு செய்யப்படுகின்றனர். 7வது மத்திய ஊதியக் குழு (சிபிசி) வனத்துறை அதிகாரி பிரிவில் 13 மற்றும் 13A நிலையில் உள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
TNPSC Current Affairs 2: பொது அறிவுப் பிரிவில் மதிப்பெண் பெறுவது எப்படி?
7வது மத்திய ஊதியக் குழுவில், 10,11,12,12 நிலையில் உள்ள இந்திய /மாநில வனத்துறை அதிகாரிகள் இணை வனப்பாதுகாவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் செய்வது எப்படி?
பணிக்கான விரிவான விண்ணப்ப படிவம் ஐ.சி.எப்.ஆர்.இ வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இந்த விரிவான விண்ணப்ப படிவத்தை நிறைவு செய்து, உரிய சான்றிதழ்களுடன் (அசல் கல்வி சான்றிதழ் மற்றும் பணி சான்றிதழ்) உரிய வகையில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவுரைகளும் வலைதளத்தில் வழங்கப்பட்டுள்ளன.
23.08.2021 தேதியிட்ட No.32-20/2021-ICFRE ஆட்சேர்ப்பு அறிக்கையொட்டி விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தற்போது மீண்டும் விண்ணப்பிக்காத தேவையில்லை என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30.04.2022 . அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.
8-ம் வகுப்பு தேர்ச்சி போதும் - ரூ50,000 வரை சம்பளத்தில் கைமேல் வேலை
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி
secretary
Indian Council of Forestry Research and Education
P.O. New Forest,
Dehra Dun- 248006
தெளிவுரை வேண்டுவோர்: அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, icfre.gov.in இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், விவரங்களுக்கு
https://icfre.gov.in/vacancy/vacancy620.pdf
ஐ.சி.எப்.ஆர்.இ:
ஐ.சி.எப்.ஆர்.இ என்பது
சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சுயேச்சை அமைப்பாகும். இதன் செயல்பாடுகளாக வனவியல் ஆய்வுகளை மேற்கொள்வது, உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களை இந்திய மாநிலங்களுக்கும் பிற பயனர் நிறுவனங்களுக்குப் பயன்படுத்த மாற்றவும், மற்றும் வனவியல் கல்வியை வழங்குவது ஆகும். இக்குழுமத்தின் கீழ் 9 ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் 4 மேம்பட்ட மையங்கள் உள்ளன. இவை பல்வேறு உயிர்-புவியியல் பகுதிகளின் ஆராய்ச்சி தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. இந்த மையங்கள் தேராதூன், சிம்லா, ராஞ்சி, ஜோர்ஹாட், ஜபல்பூர், ஜோத்பூர், பெங்களூர், கோவை, அலகாபாத், சிந்த்வாரா, ஐஸ்வால், ஹைதராபாத் மற்றும் அகர்தலா ஆகிய இடங்களில் உள்ளன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.