முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / திருவள்ளூர் மாவட்டத்தில் 23 சாகர் மித்ரா காலியிடங்கள்: இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் 23 சாகர் மித்ரா காலியிடங்கள்: இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

சாகர் மித்ரா பணி

சாகர் மித்ரா பணி

விருப்பமுள்ள நபர்கள் வரும் 28ம் தேதி மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து  அனுப்பி வைத்திட வேண்டும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thiruvallur (Tiruvallur), India

திருவள்ளூர் மாவட்டத்தில், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் (PMMSY) கீழ் பல்நோக்கு சேவை பணியாளர்கள் (Sagar Mitra)  ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.

திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள கடலோர மீனவ கிராமங்களான வல்லம்பேடுகுப்பம், மேட்டுக்குப்பம், புதுக்குப்பம், அவுரிவாக்கம் (கிழக்கு & மேற்கு), குளத்துமேடு,எடமணிக்குப்பம், பசியாவரம், செம்பாசிப்பள்ளிக்குப்பம், லைட்ஹவுஸ் நடுக்குப்பம், கரிமணல், சென்னாவரம், பெரிய ஓபுளாபுரம், நாரசம்பாளையம், குழிநாவல், பள்ளிப்பாளையம், அகரம், தொட்டிமேடு, டாக்டர் அம்பேத்கார் நகர், எடமணி ஆதிதிராவிடர், செங்கழநீர்மேடு, கடப்பாக்கம், காளாஞ்சி ஆகிய 23 கடலோர மீனவ கிராமங்களில் தலா ஒரு பல்நோக்கு சேவை பணியாளர் (Sagar Mitra) பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்கள் திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். மேற்படி, மீனவ கிராமங்கள் மற்றும் அதன் சுற்றுப்புற வருவாய் கிராமங்களில் வசிப்பவராக இருக்க வேண்டும். 01.07.2022 அன்றைய தேதிபடி வயது 35-க்குள் இருக்க வேண்டும். மாதாந்திர ஊக்க ஊதியம் ரூ.15,000/- வழங்கப்படும்.

கல்வித் தகுதி: மீன்வள அறிவியல் (Fisheries Science), கடல் உயிரியல் (Marine Biology) மற்றும் விலங்கியல் (Zoology) ஆகிய பிரிவுகளில் முதுகலை / இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேற்கண்ட பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் இல்லாத பட்சத்தில் இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry) நுண்ணுயிரியல் (Microbiology), தாவரவியல் (Botany) மற்றும் உயிர் வேதியியல் (Biochemistry) ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலை இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். மேற்கண்ட ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், தகவல் தொழில்நுட்பம் (IT) தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இதையும் வாசிக்கசமூக அக்கறை கொண்ட இளைஞரா நீங்கள்? - மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் பெறும் வாய்ப்பு!

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ள நபர்கள் 28.02.2023 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து  அனுப்பி வைத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பம் வந்து சேர வேண்டிய முகவரி, உதவி இயக்குனர் அலுவலகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, எண்:05, பாலாஜி தெரு, சங்கர் நகர், வேண்பாக்கம், பொன்னேரி, தாலுகா, திருவள்ளூர் மாவட்டம்  - 601204 ஆகும்.

First published: