திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005 செயல்படுத்தப்பட்டு வருகிறது. இச்சட்டத்தின் கீழ் தற்போது காலிப்பணியிடத்தைத் தொகுப்பூதிய அடிப்படையில் பாதுகாப்பு அலுவலகர் நிரப்புவதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
இப்பணியிடங்களுக்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். முதுகலைப்பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பாதுகாப்பு அலுவலகர் |
பணியிடம் | 1 |
சம்பளம் | ரூ.30,000 |
கல்வித்தகுதி:
பாதுகாப்பு அலுவலகர் பணிக்கு சமூகவியல்/சமூகப் பணி/ உளவியல் பாடங்களில் முதுகலைப் பட்டம் மற்றும் கணினி திறன்.
வயது வரம்பு:
Scheduled Caste / Scheduled Tribe பிரிவினர் 22 வயதில் இருந்து 35 வயது வரை இருக்க வேண்டும். Most Backward Classes / Backward Classes அதிகபட்ச வயது 32, பொதுப் பிரிவு 30 வயது வரை இருக்க வேண்டும்.
Also Read : கோவையில் கிராம உதவியாளர் நேர்காணல் தொடக்கம்: முக்கிய விவரம் உள்ளே!
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் https://tiruvallur.nic.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலக தொலைப்பேசி எண்-044-29896049 தொடர்புகொள்ளலாம்.
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://tiruvallur.nic.in/
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 18.01.2023.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jobs, Tamil Nadu Government Jobs