முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / 40,889 அஞ்சல் துறை காலியிடங்கள்: அருமையான வாய்ப்பு - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

40,889 அஞ்சல் துறை காலியிடங்கள்: அருமையான வாய்ப்பு - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

அஞ்சல்துறை வேலைவாய்ப்பு

அஞ்சல்துறை வேலைவாய்ப்பு

இந்திய அஞ்சல் துறை 40889 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த 27.01.2023 தேதி வெளியிட்டது. விண்ணப்ப செயல்முறை நாளையுடன் (16.02.2023) முடிவடிகிறது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இதுஒரு அருமையான வாய்ப்பகும்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu |

நாட்டில் உள்ள கிளை அஞ்சல் அலுவலகங்களில் காலியாக  உள்ள 40,889 அஞ்சல் பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை  இன்றுடன் (16.02.2023) முடிவடைகிறது. எந்தவித போட்டித் தேர்வும் இல்லாமல் இல்லாமல், 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு நடைபெற இருக்கிறது. மத்திய அரசு பணியில் அமர இது அருமையான வாய்ப்பாகும். எனவே, இந்த பதவிக்கு  விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், கடைசி நேரம் வரை காத்திருக்காமல் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

பணிகிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், கிராம அஞ்சல் பணியாளர் ((BranchPostmaster(BPM)/Assistant Branch Postmaster(ABPM)/Dak Sevak))
அறிவிக்கை வெளியிடப்பட்ட நாள்27.01.2023
காலியிடங்கள்இந்திய அளவில் - 40,889தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாண்டங்களில் - 3,167
வயது வரம்பு16.03.2023 அன்று, 18- 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.ஓபிசி வகுப்பினர் உச்ச வயது வரம்பில் 3 ஆண்டுகள் வரையும், பட்டியல்/பழங்குடியின வகுப்பினர் 5 ஆண்டுகள் வரையும், மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டுகள் வரையும் தளர்வுகள் கோரலாம்.
கல்வித்  தகுதிகுறைந்தது 10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
தேர்வு முறைவிண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்
இணைய தளம்indiapostgdsonline.cept.gov.in
கடைசி தேதி16.02.2023 (நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம்)
ஊதியம்கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM - BranchPostmaster BPM) - ரூ. 12,000 முதல் 29,380 வரை. உதவிக் கிளை போஸ்ட் மாஸ்டர் / அஞ்சல் பணியாளர் (Assistant Branch Postmaster - ABPM /Dak Sevak) - ரூ. 10,000 முதல் 24,470/- வரை

விண்ணப்பம் செய்வது எப்படி? indiapostgdsonline.cept.gov.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். முகப்பு பக்கத்தில், step 1  Registration பகுதியில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களும் இந்த பகுதியில் சமர்பிக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கே அனுப்பப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் தாங்கள் பயன்படுத்தும் தொலைபேசி எண்-ஐ சமர்ப்பிப்பது நல்லது.

இதையும் வாசிக்க:  40,000 அஞ்சல்துறை காலியிடங்கள்: விண்ணப்பிப்பது எப்படி? – ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!

பிறகு, step 2 - Apply Online ஐ கிளிக் செய்து, 10ம் வகுப்பு மதிப்பெண் விவரங்கள், காலியிடங்கள் பட்டியல் உள்ளிட்ட விவரங்கள் நிரப்ப வேண்டும்.  அதன்பிறகு, விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 செலுத்த வேண்டும். பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர்/ அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள்/ மாற்றுத் திறனாளிகள்/ திருநர்கள் ஆகிய பிரிவைச் சார்ந்த விண்ணப்பதார்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை

இதையும் வாசிக்க: S.E.T.C பேருந்து கழகத்தில் 685 ஓட்டுநர் - நடத்துனர் பணியிடங்கள்: முழு விவரம் இதோ!

தேவைப்படும் ஆவணங்கள்: ஆன்லைன் விண்ணப்பத்துடன்  சமீபத்திய புகைப்படம் (50 kbக்கு மிகாமல்), கையொப்பம் (50 kbக்கு மிகாமல்) பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பெண்களுக்கு முன்னுரிமை:  10ம் வகுப்புத் தேர்வில், இரண்டிற்கும் மேற்பட்ட தேர்வர்கள் சமமான மதிப்பெண்களைப் பெற்றிருந்தால் பெண் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Central Government Jobs