இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த முகாம் நடைபெறும். இதில் 8-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை முடித்த 35 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம்.
சென்னை, கிண்டியில் இன்று (அக்டோபர் 26) வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 500-க்கும் அதிகமான நபர்கள் பல்வேறு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இதுகுறித்து தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் இன்று வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன.
யார் யார் பங்கேற்கலாம்? இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த முகாம் நடைபெறும். இதில் 8-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை முடித்த 35 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்று பயன்பெறலாம்.
இந்த முகாமில் பத்துக்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. முகாமில் 500-க்கும் அதிகமான நபர்கள் பல்வேறு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
மேலும், துபாயில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கான தேர்வும் வேலைவாய்ப்பு முகாமில் நடைபெற உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு 044 – 22501525, 22505002, 22505006 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Published by:DS Gopinath
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.