ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள இளைஞர்கள், தங்களுடைய கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் சுயவிவர குறிப்புடன் செல்ல வேண்டும்.
இம்முகாமில் 200க்கும் மேற்பட்ட வேலையளிக்கும் நிறுவனங்கள் 10,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவித்துள்ளதாகவும், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொள்ளலாம் என்றும் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இடம்: ஈரோடு மாவட்டம் பெருந்துறை ரோடு, நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாள்: 21.01.2023, நேரம்: காலை 8 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை.
இதையும் வாசிக்க: புதிய பரிணாமம் எடுக்கும் அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்கள்... வேலையின்மைப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Fair