உதவி பேராசிரியர், ஆராய்ச்சி பணியிட தகுதிக்காக நடத்தப்படும் 'நெட்’ தேர்வு செப்டம்பர் 24-ஆம் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக ஜூன் மாதம் நடைபெறவிருந்த நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் செப்டம்பர் 16 முதல் 25-ம் தேதிக்குள் நெட் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் செப்டம்பர் 16, 17, 22 மற்றும் 23 -ஆம் தேதிகளில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தேர்வுகள் நடைபெறவுள்ளதால்.
நெட் தேர்வு செப்டம்பர் 24-ஆம் தேதி நடைபெறும் என என்.டி.ஏ தெரிவித்துள்ளது. தேர்வுக்கான விரிவான அட்டவணை மற்றும் ஹால்டிக்கெட் ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் எனவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது