தமிழகத்தில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 23) பள்ளி விடுமுறை என அறிவிப்பட்டுள்ளது. பள்ளிகளில் நிர்வாக குழு அமைக்கப்பட இருப்பதால் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்கப் பள்ளி இயக்குநர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில், நடுநிலைப் பள்ளி மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வரவேண்டாம் என்றும், அதேசமயம் அனைத்து ஆசிரியர்களும் பள்ளி வரவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து நடுநிலைப் பள்ளிகளில் நிர்வாகக்குழு அமைக்கப்பட இருப்பதால் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் எனவும், மற்ற வகுப்பு மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Published by:Suresh V
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.