தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குருப் 1 (TNPSC Group 1 Result 2022) பணிகளுக்கான அறிவிப்பு 2020 ஜனவரி 20 ந் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான முதன்மை தேர்வு மார்ச் 4,5,6 ஆகிய தேதிகளில்
சென்னை மையத்தில் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
துணை ஆட்சியர், காவல் துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் உள்ளிட்ட பதவிகளில் 66 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்டது. கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள், உயர்நீதிமன்ற வழக்கு ஆகியவற்றின் காரணமாக முதன்மைத் தேர்வு நடைபெறுவதில் தாமதம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, முதன்மைத் தேர்வுக்கு (TNPSC Group 1 Result 2022) 3,800 பேர் தேர்வுசெய்யப்பட்ட நிலையில் அதற்கான தேர்வுகள் சென்னையில் மார்ச் 04 ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வுக்கான முடிவுகள்
http://tnpsc.gov.in இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த தேர்வில் செங்கல்பட்டு மாவட்டத்தை சார்ந்த லாவண்யா என்பவர் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.