அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில், முதுநிலை படிப்புகளான எம்.பி.ஏ எம்.சி.ஏ மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் 2022 கல்வி ஆண்டில் சேருவதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கு (டான்செட்-2022) விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ள மாணவர்கள் உடனடியாக தங்களது விண்ணப்ப பதிவுகளை இதற்கான விண்ணப்பங்களை tancet.annauniv.edu என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு பதிவு எண் /பன்னிரென்டாம் வகுப்பு (அதற்கு இணையான கல்வித்தகுதி) பதிவு எண் /சாதிக் சான்றிதழ்/ இருப்பிடச் சான்றிதழ்/ மின்னஞ்சல் முகவரி/ தொலைபேசி எண்/ பிறந்த தேதி போன்ற விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
புகைப்படம், குறிப்பிட்ட ஆவணங்கள் மற்றும் கையொப்பம் இல்லாமல் அனுப்பப்படும் இணையவழி விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
இணையவழி விண்ணப்பத்தில் சில தளங்கள் திருத்த இயலாது. எனவே, விண்ணப்பதாரர்கள் மிகுந்த கவனத்துடன் விவரங்களைப் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இணையவழியில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தில், விண்ணப்பதாரர்களின் விவரங்கள் இறுதியானவையாகக் கருதப்படும். இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின்பு திருத்தம் கோரி . பெறப்படும் எந்தவொரு கோரிக்கையும் பரிசீலிக்கப்படமாட்டாது.
கல்வித் தகுதி:
ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி?
டான்செட் 2022: எப்படி பதிவு செய்வது என்ற படிப்படியான வழிமுறைகள்..
ஸ்டெப் 1: அண்ணா பல்கலைகழகத்தின் அதிகாரபூர்வமான தளத்திற்கு செல்லவும் -tancet.annauniv.edu.
ஸ்டெப் 2: இணைப்பின் முகப்புப் பக்கத்தில், TANCET 2022 registration (டான்செட் 2022 பதிவு செய்தல்) என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: கிளிக் செய்தவுடன், ஒரு புதிய பக்கம் தோன்றும்
ஸ்டெப் 4: அந்தப் பக்கத்தில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்து, விண்ணப்பத்தை பிராசஸ் செய்யுங்கள்.
ஸ்டெப் 5: விண்ணப்பத்துக்கான கட்டணத்தை ஆன்லைனிலேயே செலுத்துங்கள்.
ஸ்டெப் 6: கட்டணம் செலுத்திய பின்பு, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
ஸ்டெப் 7: அப்ளிகேஷன் செயல்முறை நிறைவடைந்தது. விண்ணப்பப் படிவத்தை நீங்கள் பிரின்ட் செய்து வைத்துக் கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணைப்பு Tamil Nadu
Common Entrance Test (TANCET) 2022
உடனடியாக விண்ணப்பியுங்கள்:
கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர், விண்ணப்பிக்கும்போது, இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்பச் சிக்கல்களோ எழவாய்ப்புள்ளது. எனவே, விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசிநாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே, போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.