முகப்பு /செய்தி /கல்வி / "பிளஸ் 2 மொழித் தேர்வில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை" - அதிர்ச்சித் தகவல்

"பிளஸ் 2 மொழித் தேர்வில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை" - அதிர்ச்சித் தகவல்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தனித்தேர்வுகளில் மொத்தம் 8901 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 7786 மாணவர்கள் தேர்வெழுதினர்.  மொத்தம் 1,115 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்று நடைபெற்ற 12ம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இன்று துவங்கியது. இந்த பொதுத் தேர்விற்கு 8.5 லட்சம் (8,51,303) மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 8.01 (8,01,744) லட்சம் மாணவர்கள் மட்டுமே தேர்வெழுதினர். சரியாக, 49,559 மாணவர்கள் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. அதேபோன்று , தனித்தேர்வர்களில் மொத்தம் 8,901 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 7,786 மாணவர்கள் தேர்வெழுதினர்.  1,115 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை.

வராத மாணவர்களை கண்டறிந்து வரும் ஜூன் மாதம் வரக்கூடிய துணைத்தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்கு வருகைபுரிந்த மாணவர் இன்று தேர்வுக்கு மட்டும் வராமல் இருந்தால் அவர்களை தலைமை ஆசிரியர்கள் மூலம் கண்டறிந்து வரக்கூடிய நாட்களில் இதரபாடங்களை பொதுத்தேர்வு எழுத வைக்கவும், நீண்ட நாள் வராமல் உள்ள மாணவர்களையும் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

First published:

Tags: 12th exam, Tamil Nadu