நடைபெற்று முடிந்த 11,12ம் வகுப்பு தொடர்பான அசல் மதிப்பெண் சாண்றிதழ்களை வரும் 15ம் தேதி முதல் அனைத்து மாணவர்களும் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவும் , தனித்தேர்வர்கள் தங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வாயிலாகவும் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.
தமிழகத்தில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20ம் தேதியும், 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜுன் 27ம் தேதியும் வெளியிடப்பட்டன. மேலும், இதில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு தனித்தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
11, 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் பெரும்பாலான உயர்க்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சாண்றிதழ்கள் வழங்கப்பட்டன. கலை அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை முவுவுற்ற நிலையில், பிஇ.பிடெக் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருகிறது.
இதையும் வாசிக்க: உயர்கல்வி படிப்பு: கல்விக்கடன் பற்றித் தெரிந்து கொள்வோம்
இந்நிலையில், 11,12ம் வகுப்பில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு செப்டம்பர் 15ம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 12th exam, 12th Exam results, Department of School Education, Education