முகப்பு /செய்தி /கல்வி / 11-ம் வகுப்பு மொழித்தேர்வை 12,600 மாணவர்கள் எழுதவில்லை: அதிர்ச்சித் தகவல்!

11-ம் வகுப்பு மொழித்தேர்வை 12,600 மாணவர்கள் எழுதவில்லை: அதிர்ச்சித் தகவல்!

காட்சிப் படம்

காட்சிப் படம்

தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 7,88,64 மாணவர்கள் இந்த பொதுத் தேர்வுக்கு பதிவு செய்தனர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்று நடைபெற்ற 11ம் வகுப்பு மொழித் தேர்வில் 12,600 மாணவர்கள் தேர்வெழுத வரவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

2023 -24ம் கல்வி ஆண்டிற்கான 11ம் வகுப்பிற்கான அரசு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 7,88,64 மாணவர்கள் இந்த பொதுத் தேர்வுக்கு பதிவு செய்தனர். இதில், இன்று நடைபெற்ற மொழித் தேர்வில் 12,600 பேர் தேர்வு எழுத வரவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, நேற்று தொடங்கிய 12-ஆம் வகுப்பு தேர்வுகளில் தமிழ் மொழிப்பாடத் தாளை 50,674 மாணவர்கள் எழுதவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அதாவது, 12ம் வகுப்பு தேர்வுக்கு பதிவு செய்த மொத்த மாணவர்களில் சுமார் 7% மாணவர்கள் தேர்வை எழுதாதது இதுவே முதல் முறையாகும்.

First published:

Tags: 11th Exam