2023 -24ம் கல்வி ஆண்டிற்கான 11ம் வகுப்பிற்கான அரசு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 7,88,64 மாணவர்கள் இந்த பொதுத் தேர்வுக்கு பதிவு செய்துள்ளனர்.
இன்று நடைபெற்ற 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் ஆர்வமுடன் எழுதினர். இன்று, தமிழ் மொழி பாடத் தேர்வு மொத்தமுள்ள 3,224 மையங்களில் நடைபெற்ற மொழிபாடத் தேர்வினை மாணவர்கள் ஆர்வமுடன் எழுதினர். இதே போன்று, வேலூர், கடலூர்,சேலம், கோயம்புத்தூர், மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் என 8 சிறைகளிலுள்ள தேர்வு மையத்தில் 125 சிறைவாசிகள் தேர்வு எழுதினர். சென்னையில் 398 பள்ளிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் தேர்வில் பங்கேற்றனர்.
முன்னதாக, நேற்று 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியது. நேற்று நடைபெற்ற தமிழ் மொழித் தேர்வில் 49,599 மாணவர்கள் தமிழ் மொழிப் பாடத் தேர்வை எழுத வரவில்லை என்ற அதிர்ச்சிகரணமான தகவல் வெளியானது. இதனையடுத்து, தேர்வெழுதாத மாணவர்கள் குறித்து, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 11th Exam