தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்துக் கல்லூரிகளின் மாணவர்களுக்காகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. கலை மற்றும் அறிவியல், மருத்துவம், சட்டம், பொறியியல், தொழில்நுட்பம் ஆகிய பாடத்திட்டங்களைக் கடந்து மாணவர்களுக்கு மொழி, பண்பாடு, இலக்கியம், கலைகள், வரலாறு ஆகியவற்றின் புரிதல்களையும், இன உணர்வினையும் இப்போட்டிகள் ஊக்குவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அனைத்து அரசு அங்கீகாரம் பெற்ற கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை, கால்நடை, பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தமிழகப் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி மாணவர்கள் போட்டிகளில் பங்கு பெறலாம். மேலும் ஒவ்வொரு கல்லூரிகளும் நிறுவனத்தின் சார்பாகத் தமிழுக்கும், ஆங்கிலத்திற்கும் தலா இரண்டு மாணவர்கள் பங்குபெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் விதிமுறைகள் மற்றும் பரிசு விவரங்கள்:
1. போட்டிகள் மாவட்ட அளவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தனித்தனியாக நடத்தப்படும்.
2. மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள் கலந்துகொள்ளும் மாநில அளவிலான போட்டி இறுதியில் நடத்தப்படும்.
3. வெற்றி பெற்ற மாணவர்களுக்குத் தமிழுக்கும், ஆங்கிலத்திற்கும் தனித்தனியாகப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.
4. மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுத் தொகையில் விவரங்களை அறிவித்துள்ளனர்.
மாவட்ட அளவில் | மாநில அளவில் |
முதல் பரிசு ரூ,20,000 | முதல் பரிசு ரூ.1,00,000 |
இரண்டாம் பரிசு ரூ.10,000 | இரண்டாம் பரிசு ரூ.50,000 |
மூன்றாம் பரிசு ரூ.5,000 | மூன்றாம் பரிசு ரூ.25,000 |
போட்டிக்கான தலைப்புகள்:
தமிழ்:
1."செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே”
2. பெரியாரும் அம்பேத்கரும் கண்ட சமூக ஐனநாயகம்
3. கல்விக் கண்திறந்த கர்மவீரர் காமராசர்
4. அறிஞர் அண்ணாவின் “தமிழ்க் கனவு”
5.கலைஞர் கண்ட மாநில சுயாட்சியும், மாநில உரிமைகளும்
6.மீண்டும் அண்ணல் காந்தி அவதரிக்க வேண்டும்.
7.வரலாறு தமிழ்நாட்டில் இருந்து துவங்குகிறது!
8.ஏற்றத்தாழ்வுகள் இல்லாத இந்தியா!
9.மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்!
10.தமிழ்நாட்டின் தியாகதீபங்களால் சுடர்விட்ட இந்திய விடுதலைப்போர்!
11.இந்தியா நமது தேசம்! மனித நேயம் அதன் சுவாசம்!!
12.நேரு கண்ட மதச்சார்பற்ற இந்தியா
13.என் சமகால இளைஞர்களே..?
14.சமூகநீதி காப்போம். சரித்திரம் படைப்போம்
15.திராவிடம் சொல்லும் பண்பாட்டு நெறி
Also Read : எம்.எஸ்.சி படிப்பில் ஆர்வம் காட்டும் மாணவர்கள்! - என்ன சொல்கிறது உயர்கல்வி அறிக்கை?
ஆங்கிலம்:
1. India of My Dreams
2. Save my Mother Earth!
3. Do we need reservation in Judiciary?
4. The Perils of jobless growth
5. Serving Humanity is my Religion
6. Independent Judiciary - The watch Dog of Democracy
7. Freedom of Expression and the civilized society
8. Women Empowerment
9. Social Media -A blessing or a curse?
10. Unity Not Uniformity
11. Freedom of Religion - A basic human Right
12. Social justice vs inequality
13. Dravidian Ethos
14. The roll of State Governments in Economic Development
15. Regional aspirations a must for National progress
ஆர்வமுள்ள மாணவர்கள் வருகின்ற 20.02.2023 ஆம் தேதிக்குள் பெயர்கள், மின்னஞ்சல், அஞ்சல் முகவரி மற்றும் தொலைப்பேசி எண் ஆகியவற்றை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னஞ்சல் முகவரி : : smcelocution@gmail.com
அஞ்சல் முகவரி : திரு.D.ரவிச்சந்திரன் இ.ஆ.ப.,
உறுப்பினர் செயலர், மாநில சிறுபான்மையினர் ஆணையம்,
முதல் தளம், கலச மஹால், புராதன் கட்டிடம், சேப்பாக்கம், சென்னை - 600005.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: College, College student, Speech