முகப்பு /செய்தி /கல்வி / பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நோட்டு புத்தகங்கள், பைகளில் அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை அச்சிட தடை விதிக்க கோரிக்கை...

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நோட்டு புத்தகங்கள், பைகளில் அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை அச்சிட தடை விதிக்க கோரிக்கை...

புத்தகங்கள்

புத்தகங்கள்

சென்னை உயர் நீதிமன்றத்தில் நமது திராவிட இயக்கம் என்ற அமைப்பின் தலைவர் ஓவியம் ராஜன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “தற்போது இருப்பில் உள்ள பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்களை பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இருப்பில் உள்ள பாடப்புத்தகங்கள் நோட்டுகள்,பைகள் உள்ளிட்டவற்றில் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, பழனிச்சாமி படங்கள் இருப்பதனால் அவற்றை விநியோகிக்க வேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கி வரும்  பாடப்புத்தகம், எழுதுபொருள், புத்தகப்பை, சைக்கிள் ஆகியவற்றில் கடந்த அதிமுக ஆட்சியின்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, முதல்வராக இருந்த பழனிச்சாமி ஆகியோரது புகைப்படங்கள் அச்சிடப்பட்டிருந்தன. தற்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால்  அவற்றை கிடப்பில் போடாமல், மாணவர்களுக்கு தொடர்ந்து வழங்க கோரி நமது திராவிட இயக்கம் என்ற அமைப்பின் தலைவர் ஓவியம் ராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்துல் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அவர் மனுவில், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டு இருப்பதனால், அவற்றை விநியோகிக்க வேண்டாம் என பள்ளிக் கல்வித்துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இரண்டு அரசுகளுக்கு இடையேயான அரசியல் நிலை வேறுபாட்டால் பொது மக்களுடைய வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி படங்கள்  அச்சிடப்பட்ட பொருட்களை தேக்கி வைக்காமல் மாணவர்களுக்கு  விநியோகிக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருட்களில் அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை ஆச்சிட தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் படிக்க... கொங்கு நாடு கோரிக்கை: அக்கறையா, அரசியலா?

இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (ஜூலை 13, 2021 11)

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதையடுத்து, வழக்கு விசாரணையை நான்கு வாரங்கள்  தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Chennai High court, School books