புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 96.13 சதவிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த முறையை விட 4.81 சதவீதம் கூடுதல் ஆகும்
புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை முதலமைச்சர் ரங்கசாமி, கல்வி அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் வெளியிட்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த முதல் அமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து பள்ளிகளின் தேர்ச்சி விழுக்காடு 96.13 சதவீதம் எனவும் கடந்த முறையை விட இது 4.81 சதவீதம் கூடுதல் எனவும் தெரிவித்தார்.
மேலும், 14 ஆயிரத்து 423 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 13 ஆயிரத்து 865 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.68 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் இரண்டு அரசு பள்ளிகள் அடங்கும் என்ற முதல்வர் ரங்கசாமி, கடந்த ஆண்டை விட அரசு பள்ளிகள் 10 சதவிதம் அதிகம் தேர்ச்சியை பெற்றுள்ளன என குறிப்பிட்டார்.
மேலும் படிக்க: 12, 10ம் வகுப்பு துணைத்தேர்வு, தற்காலிக சான்றிதழ் பதிவிறக்கம் எப்போது- முழு விவரம்
தொடர்ந்து பேசிய அவர், ‘பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளும் உயர்கல்வி படிக்கும் அளவிற்கு அரசு கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் உருவாக்கி கொடுக்கப்படும் கல்வி கட்டணங்கள் குறித்து அரசு விரைவில் முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிடும்’ என தெரிவித்தார். பேட்டியின் போது கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், கல்வித்துறை செயலர் ஜவகர், மற்றும் கல்வித்துறை இயக்குனர் ருத்ர கவுடு ஆகியோர் உடன் இருந்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.