எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கான நீட் தேர்வு இந்தியா முழுவதும் இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,
திண்டுக்கல் மாவட்டத்தில் 2 வது முறையாக 4 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் -
மதுரை சாலையில் உள்ள தனியார் கல்லூரி, நத்தத்தில் உள்ள தனியார் கல்லூரி,
கரூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரி, திண்டுக்கல் நகரில் உள்ள தனியார் பள்ளி என நான்கு மையங்களில் 2,930 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வு மையத்திற்கு வருகின்ற மாணவிகள் தோடு, செயின், கொலுசு, துப்பட்டா, மூக்குத்தி, தலைமுடியில் அணியக்கூடிய கிளிப் ஆகியவற்றை கழற்றிய பின்பு தான் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் மாணவர்கள் அரைக்கை சட்டை செருப்புடன் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் மாணவ மாணவிகள் ஆதார் கார்டு ஒரிஜினல், விண்ணப்பப்படிவம், மேக்ஸி சைஸ் போட்டோ, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, தண்ணீர் பாட்டில் முக கவசம் சானிடைசர் ஆகியவற்றை மாணவிகள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது.
இதையும் வாசிக்க: நீங்கா மருத்துவ கனவுடன், நீட் தேர்வு எழுத சென்றுள்ள 56 வயது ராஜ்ஜியகொடி
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு முதல் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வருடம் இரண்டு தேர்வு மையங்கள் அமைக்கப்பட்ட நிலையில் மாணவர்களின் வசதிக்காக தற்பொழுது 4 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வு மையத்திற்கு முன்னதாக வருகை தந்து எவ்வித பதற்றமும் இன்றி எழுதுவதாக தெரிவித்தனர். தேர்வு மையத்தை அதிகப்படுத்தியது மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.