நாடு தழுவிய அளவில் கடந்த 2020-21-ம் கல்வியாண்டில் உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 7 புள்ளி 5 சதவீதம் அளவுக்கு உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி குறித்த அகில இந்திய ஆய்வு அறிக்கையை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, கொரோனா பெருந்தொற்று பரவல் தொடங்கிய 2020-21-ம் கல்வியாண்டில் ஒட்டுமொத்தமாக 4 கோடியே 13 லட்சம் பேர் கல்லூரிகளில் சேர்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முந்தைய ஆண்டைவிட 2 லட்சம் பட்டியல் இன மாணவர்களும், 3 லட்சம் பழங்குடியின மாணவர்களும், 6 லட்சம் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களும் கூடுதலாக சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2014-15-ம் ஆண்டு முதலான காலத்தில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 36 லட்சம் பேர் கூடுதலாக சேர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
ஆனால், உயர்கல்வியில் சேரும் இஸ்லாமிய மாணவர்களின் அளவு 5 புள்ளி 5 சதவீதத்திலிருந்து 4 புள்ளி 6 சதவீதமாக குறைந்துள்ளது. பிற சிறுபான்மையின மாணவர்களின் அளவு 2 புள்ளி 3 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. உயர்கல்வியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 45 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2020-21 கல்வியாண்டில் 70 பல்கலைக் கழகங்களும், 1,453 கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மாணவர்களின் எண்ணிக்கையில் 3-வது இடத்தையும், கல்லூரிகளின் எண்ணிக்கையில் 5-வது இடத்தையும் பிடித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Higher education