விதிமுறைகளை மீறி தனியார் பள்ளிகள் விடுமுறை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலத்தில் இயங்கி வரும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பயின்று வந்த 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டார்.மாணவியின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. பள்ளியின் உடமைகளை சேதப்படுத்தப்பட்டன. இதனையடுத்து, பள்ளியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாளை ஒருநாள் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் இயங்காது என தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைபின் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதையும் வாசிக்க: கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.. அமைதி காக்க முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
ஆனால், விதிமுறைகளை மீறி தனியார் பள்ளிகள் விடுமுறை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.மேலும் , எந்தவித முன் அனுமதி பெறாமல் தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்தார் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நடைவடிக்கை எடுப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை ஆணையர் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.