அனைத்து அரசு பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை!
அனைத்து அரசு பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை!
மாதிரிப்படம்
புதுக்கோட்டை மாவட்டம் திருமணஞ்சேரி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்து தர உத்தரவிட கோரி சண்முகம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமணஞ்சேரி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்து தர உத்தரவிட கோரி சண்முகம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
பள்ளியில் காவலர்கள் இல்லாததால் இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடப்பதாக அவர் மனுவில் குற்றம்சாட்டியிருந்தார். இந்த மனு நிதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி வளாகங்களில் சிசிடிவி கேமரா பொருத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நீதிமன்றம் நம்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்து தருவது தொடர்பான முந்தைய உத்தரவை நிறைவேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி அறிக்கை அளிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.