சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடரை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு வரும் சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கடந்த 28-ம் தொடங்கி ஆகஸ்ட் 9-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றதால் தமிழக அரசு கோலகலமாக தொடக்க போட்டியை நிகழ்த்தியது.
Also Read : கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. ரகசிய வாக்குமூலம் அளித்த மாணவிகள் குறித்து சிறுமியின் தாய் சந்தேகம்
44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரை பிரதமர் நரேந்திர மோடி சென்னை நேரு அரங்கில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவர், அமைச்சர், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனிடையே 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக கடந்த ஜூலை 28 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட் 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை ஈடுசெய்யும் வகையில் வரும் சனிக்கிழமை ( 27-ம் தேதி ) வேலைநாளாக இருக்கும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.