முகப்பு /செய்தி /கல்வி / பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் உயர வாய்ப்பு..

பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் உயர வாய்ப்பு..

கோப்புப் படம்

கோப்புப் படம்

பொரியியல் கல்லூரிகளில், கடந்த ஆண்டு கட்-ஆஃப் மதிப்பெண்ணை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண் சற்று உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண்ணை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண் சற்று உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு 2646 மாணவர்கள் 190 கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 3445மாணவர்கள் 190-க்கும் அதிகமான கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அந்த வகையில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் கூடுதலாக 799 மாணவர்கள் 190-க்கும் அதிகமாக கட் ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும் 155 கட் ஆப் மதிப்பெண் மற்றும் அதற்கு கீழ் கட்-ஆஃப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கலந்தாய்விற்கு அதிகளவு விண்ணப்பித்துள்ளதும் கட்-ஆஃப் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க...முதலில் கஜா புயல்.. பின்பு ஊரடங்கு.. இப்போது சூறைக்காற்று.. வேரோடு சாய்ந்த வாழை மரங்களால் வேதனையில் விவசாயிகள்..

மேலும் நீட் தேர்வு முடிவுகள் மற்றும் மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜே.இ.இ பிரதான நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு துவங்க இருப்பதாக தகவல் வெளியானது. அதன் காரணமாக உத்தேச பட்டியல் வெளியாகி இருப்பதால் இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள பொறியியல் படிப்பிற்கான இடங்களை மாணவர்கள் கூடுதலாக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

இதன் காரணமாகவும் கட்-ஆஃப் மதிப்பெண் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் 190-க்கு மேல் கட்-ஆஃப் மதிப்பெண்ணில் OC பிரிவு மாணவர்கள் அதிக எண்ணிக்கையிலும் BC மற்றும் MBC பிரிவு மாணவர்கள் குறைவாகவும் உள்ளனர். இவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் சற்று குறையவும் வாய்ப்பு உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

First published:

Tags: Engineering student