தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென் மேற்கு வங்க கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை
சென்னைக்கு அருகில் கரையை கடக்க கூடும்.
இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. கனமழை அடுத்த 5 நாட்களுக்கு தொடரும் என்றும் வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று வியாழக்கிழமை மதியமும், நாளை வெள்ளிக்கிழமையும் அனைத்து பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே காலை ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மட்டும் விடுமுறை என அறிவித்திருந்த நிலையில் தற்பொழுது மாவட்ட ஆட்சியர் மதியம் முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிக்கு விடுமுறை என அறிவித்திருக்கிறார்.
கனமழை காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, சேலம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மழையின் தீவிரத்தை பொறுத்து மற்ற மாவட்ட ஆட்சியர்களும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.