மேல்நிலைப் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு முறையை கடைபிடிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை கடிதம் எழுதியுள்ளது.
அந்தக் கடிதத்தில், ‘இட ஒதுக்கீடு தொடர்பான சட்டங்களின் படி 2022- 23 ஆம் கல்வியாண்டிலும் மேல்நிலைக் கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் பொழுது, மாநிலத்தின் அதிகார வரம்பிற்குள் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளிலும்(சிறுபான்மை கல்வி நிலையங்கள் நீங்கலாக) பழங்குடியினர், ஆதி திராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கீழ்க்காணும் விகிதத்தில் கடைபிடிக்கட்ட வேண்டும்.
பொதுப்பிரிவு |
31% |
பழங்குடியினர் |
1% |
ஆதி திராவிடர் |
18% (இதில் ஆதி திராவிட அருந்ததியர்கள் மாணவர்களுக்கு 3% முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் ) |
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் |
20% |
பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் |
3.5% |
பிற்படுத்தப்பட்டோர் |
26.5% |
மேற்கண்ட அட்டவணையில் தெரிவித்துள்ளவாறு மாணவர் சேர்க்கையின் போது, பொதுப்பிரிவினர்கான 31% இடத்திற்கான பட்டியல் முதலில் தயாரிக்கப்பட வேண்டும். இதில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே முன்னுரிமை வழங்கிடவும், பொதுப்பிரிவினர், ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் என்ற எவ்வித பாகுபாடின்றி தயாரித்திடவும் அறிவுறுத்தப்படுகிறது. அதன் பின்னர் அந்தந்த பிரிவுக்கான பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும்.
இதையும் வாசிக்க: தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி?
மாநிலத்தின் அதிகாரவரம்பிற்குள் செயல்படும் அனைத்துவகை பள்ளிகளிலும் (சிறுபான்மை கல்வி நிலையங்கள் நீங்கலாக) பாடப் பிரிவு வாரியாக (Group-wise) மேற்கூறப்பட்ட விகிதத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு மேல்நிலைக்கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்.
இதையும் வாசிக்க: தொழிற்கல்வியில் 7.5% இடஒதுக்கீடுப் பயனாளர்களின் பட்டியல் வெளியீடு: பட்டியலில் இல்லாத மாணவர்கள் மேல்முறையீடு செய்யலாம்
அனைத்து பள்ளிகளுக்கும் இச்செயல்முறை ஆணையினை அனுப்பி ஒப்பம் பெற்று தங்கள் கோப்பில் வைக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் மேற்கூறியவாறு அனைத்து பள்ளிகளிலும் சேர்க்கையை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறர்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.