இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் M.A., M.Sc., M.Com., உள்ளிட்ட முதுகலை படிப்புகளில் சேர இதுவரை தனித்தனி நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், வரும் கல்வியாண்டு முதல் ஒரே நுழைவுத் தேர்வாக CUET - PG என்ற பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று UGC அறிவித்தது
இதையடுத்து வரும் கல்வியாண்டில் ( 2022-23 ) PG மாணவர் சேர்க்கைகாக, CUET - PG தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்து, அதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவையும் UGC தொடங்கியது.
இந்நிலையில், இந்தியாவில் உள்ள 54 மத்திய பல்கலைக்கழகங்களில் டெல்லி JNU, புதுச்சேரி பல்கலைக்கழகம், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் உள்ளிட்ட 32 மத்திய பல்கலைக்கழகங்கள் மட்டுமே CUET - PG தேர்வின் படி மாணவர் சேர்க்கையை நடத்த உள்ளதாகவும், 22 மத்திய பல்கலைக்கழகங்கள் CUET - PG தேர்வை வரும் கல்வியாண்டில் ஏற்க மறுத்துள்ளதாகவும், இனிவரும் காலங்களில் 22 பல்கலைக்கழகங்களும் CUET - PG தேர்வை ஏற்கும் என்று நம்புவதாகவும் UGC தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
CUET - PG தேர்வுக்கு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும் பல்கலைக்கழகங்களும் அதை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
CUET (PG) தேர்வு:
முதுகலை படிப்புகளுக்கான பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு வரும் ஜுலை மாதம் கடைசி வாரத்தில் நடைபெறும். இதற்கான விண்ணப்ப படிவங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன.
முதுகலை படிப்புகளுக்கு பழைய முறையில் சேர்க்கை தொடரும் - முக்கிய பல்கலைக்கழகங்கள் அறிவிப்பு
CUET (PG) 2022 -ன் அதிகாரப்பூர்வ இணையதளம்
https://cuet.nta.nic.in/ . ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 18-06-2022 ஆகும். செலுத்தப்படும் கட்டணம் அன்றிரவு 11.50 மணி வரை பெறப்படும்.
அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், இங்கு கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். https://cuet.nta.nic.in/மற்றும் www.nta.ac.in
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.