தமிழ்நாட்டில் செயல்படும் தனியார் பள்ளிகளில் 162 பள்ளிகள் முறையான அனுமதி பெறாமல் இயங்கி வருவதாக மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளைத் தவிர, 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுயநிதி பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. சுயநிதி மெட்ரிகுலேசன், சி.பி. எஸ்.இ., சர்வதேச, பன்னாட்டுப் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககத்தின் உரிய அனுமதி பெறுவது அவசியமாக உள்ளது.
சில தனியார் பள்ளிகள் ஒரு பள்ளிக்கு அனுமதி வாங்கி, அதனைக் கொண்டு கிளை பள்ளிகளைத் திறந்து செயல்பட்டு வருகின்றனர். இது குறித்து மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககத்துக்குப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் தமிழ்நாட்டில் 162 தனியார்ப் பள்ளிகள் முறையான அனுமதி பெறாமல் செயல்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பள்ளிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு இருப்ப தாகவும், விரைவில் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய விளக்கம் பெற இருப்பதாகவும் கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்த பள்ளிகள் மீது மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Private schools, Tn schools