தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று நண்பகல் 12 மணிக்கு வெளியாகிறது.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மே 6ம் தேதி தொடங்கி மே 30ம் தேதி முடிவடைந்தது. விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைந்து ஜூன் 17ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர், 12ம்வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளுடன் 10ம் வகுப்பு தேர்வு முடிவும் இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.
12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் சற்று நேரத்தில் வெளியாக உள்ள நிலையில், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 12மணிக்கு வெளியாகவுள்ளது.
www.tnresults.nic.in,
www.dge1.tn.nic.in,
www.dge2.tn.nic.in,
www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வழியாக தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கும் , தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி (SMS)வழியாக தேர்வு முடிவுகள் வெளியிடப்பப்படும் என்றும் அரசுத் தேர்வுகள் துறை தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.