முகப்பு /செய்தி /திண்டுக்கல் / சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து வழிபாடு நடத்திய கிராம மக்கள் - வேடசந்தூர் அருகே விநோத விழா

சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து வழிபாடு நடத்திய கிராம மக்கள் - வேடசந்தூர் அருகே விநோத விழா

நிலா பெண்ணாக  கிராம மக்கள் பாவித்த சிறுமி

நிலா பெண்ணாக கிராம மக்கள் பாவித்த சிறுமி

Dindugal Moon Girl | வேடசந்தூர் அருகே சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து கிராம மக்கள் வினோத வழிபாடு நடத்தினர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Dindigul, India

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வவோர் ஆண்டும் தைப்பூசத்தன்று அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுமியை தேர்வு செய்து அவரை இரவு முழுவதும் நிலா பெண் அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கம். நடப்பாண்டில் கார்த்திகேயன் மேகலா தம்பதியின் பத்து வயது மகள் சர்வ அதிர்ஷ்டா என்பவர் நிலா பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரை அங்குள்ள மாடச்சி அம்மன் கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழங்க சரளை மேடு பகுதிக்கு பெண்கள் அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு ஆவாரம் பூ மாலையிட்டு ஆவாரம் பூக்கள் அடங்கிய கூடையை தலையில் வைத்து மாரியம்மன் கோவில் முன்பு அமர வைத்து பெண்கள் பாட்டு பாடி கும்மியடித்து மகிழ்ந்தனர்.

அதிகாலையில் நிலா மறைய தொடங்கும் சமயத்தில் சிறுமி கொண்டு வந்த ஆவாரம்பூ கூடையில் தீப சட்டியை வைத்து தீபம் ஏற்றி அதனை நீர் நிறைந்த கிணற்றில் மிதக்க விட்டு அம்மனை வணங்கி வீடு திரும்பினார்.

First published:

Tags: Dindugal, Local News