விருதுநகர் மாவட்டம் வீர பெருமாள் கோயில் தெரு, சூலக்கரையை சேர்ந்த நல்லசாமி மனைவி ரங்கநாயகி. இவருக்கு நாகேஸ்வரன், நாகார்ஜுன், ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
ரங்கநாயகியின் தம்பி சூரிய நாராயணன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். மற்றொரு தம்பி வீரபாண்டி ரங்கநாயகி உடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர். சூரிய நாராயணன் சிங்கப்பூரில் பணி செய்து அங்கிருந்து அனுப்பும் பணத்தை கொண்டு விருதுநகர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நிலங்களை வாங்கி ரங்கநாயகி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில், இதுபற்றி தெரிந்து கொண்ட கொடைக்கானல் பாரதிய ஜனதா கட்சியின் நகர தலைவராக உள்ள சதீஷ்குமார்(37), இவரது தந்தை பத்மநாதன் மற்றும் இவரது உறவினர்கள் சுமதி, அங்குராஜ், ஸ்ரீநாச்சார் அம்மாள் அறக்கட்டளை நிர்வாகிகளான சந்திரன் குழந்தை செல்வம் ஆகியோர் ரெங்கநாயகியை அணுகி தங்களிடம் மதுரையில் வண்டியூர் பகுதியில் 12 ஏக்கர் 70 சென்ட் நிலம் உள்ளது.
இதற்கான பவர் பத்திரம் தன் பெயரில் உள்ளது என்று பத்மநாதன் கூறியுள்ளார். பத்மநாதன் தான் முன்னாள் நீதிபதி என்று அறிமுகம் ஆகி உள்ளார். பணி ஓய்வுக்கு பின்னர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும் ரங்கநாயகி இடம் கூறியுள்ளார்.
இதை நம்பிய ரங்கநாயகி இவர்கள் காண்பித்த இடத்தை பார்வையிட்டு உள்ளனர். பவர் பத்திரத்தையும் பார்த்து உள்ளனர். பின்னர் சதீஷ்குமார் உள்ளிட்ட ஆறு பேர்களும் ரங்கநாயகி இடம் இந்த நிலத்திற்கான விற்பனை தொகை 34 கோடி 92 லட்சத்து 50 ஆயிரம் என்று பேசி முடித்துள்ளனர்.
உடனடியாக அட்வான்ஸ் தொகை ரூ.50 லட்சத்தை இவர்கள் பெற்றுக் கொண்டனர். ரூ.50 லட்சம் பெற்றுக்கொண்டதற்கு உரிய ரசீதையும், அதற்கான செக்கையும் சதீஷ்குமாரின் தந்தை பத்மநாதன் கொடுத்துள்ளார்.
ரங்கநாயகி இந்த நிலத்தை பதிவு செய்ய சதீஷ்குமார் உள்ளிட்டோரை அணுகி உள்ளனர். அவர்கள் எந்த பதிலும் சொல்லாமல் பல மாதங்களாக இழுத்தடித்து வந்துள்ளனர். கடந்த 11. 1. 20 21 அன்று 50 லட்சம் ரொக்கம் பெற்றுக் கொண்ட சதீஷ்குமார் குழுவினர் பல மாதங்களாக இழுத்து அடித்து எந்த தகவலையும் சொல்லாமல் இருந்ததை அடுத்து ரெங்கநாயகி மற்றும் அவரது தம்பி வீரபாண்டி உள்ளிட்டோர் அவர்களை அணுகி உள்ளனர்.
அப்போது தங்களுக்கு மீண்டும் ரூ.20 லட்சம் கொடுத்தவுடன் நிலத்தை பதிந்து கொடுத்து விடுவதாக கூறி உள்ளனர். இதையடுத்து கடந்த 16. 7. 20 21. அன்று ரங்கநாயகி சதீஷ்குமார் குழுவினரிடம் மீண்டும் 20 லட்சம் ரூபாய் கொடுத்து உள்ளார். அத்தாட்சியையும் ரங்கநாயகி பெற்றுக் கொண்டு உள்ளார்.
பின்னர் இவர்கள் ஏமாற்றும் நோக்கில் செயல்பட்டதை தெரிந்து கொண்ட ரங்கநாயகி கடந்த 20.9.2021 அன்று பழனி சிவகிரி பட்டியில் உள்ள பத்மநாபன் வீட்டிற்கு சென்று உள்ளார். இவர்களை பார்த்த பத்மநாதன், சதீஷ்குமார் உள்ளிட்டோர் இவர்களை கொலை மிரட்டல் செய்து விரட்டி அடித்து உள்ளனர்.
இதையடுத்து மதுரை சரக டிஐஜி உள்ளிட்டோரிடம் ரங்கநாயகி நில அபகரிப்பு புகார் செய்து உள்ளார். ரங்நாயகியிடம் சதீஷ்குமார் குழுவினர் காட்டிய நிலம் மதுரை அழகர் கோயிலுக்கு சொந்தமான இந்துசமய நிலைய துறைக்கு சொந்தமான நிலம் என்பது பின்னர் தெரியவந்துள்ளது.
பாஜக நிர்வாகி இந்து சமய அறநிலையத்துறை நிலத்தை காட்டி ரூ.70 லட்சம் மோசடி செய்ததை கண்டுபிடித்த விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் இவர் மீது கடந்த வாரம் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடினர்.
இதையடுத்து கொடைக்கானல் பாரதிய ஜனதா கட்சியின் நகரத் தலைவராக உள்ள சதீஷ்குமார் மதுரையில் இருந்தது தெரியவந்தது. விருதுநகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராதிகா சதீஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தார். இந்து சமய அறநிலையத்துறை நிலத்தை காட்டி 70 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நில மோசடி வழக்கில் மீதம் உள்ள பத்மநாதன், சுமதி, அங்கு ராஜ், அறக்கட்டளை நிர்வாகிகளான சந்திரன், குழந்தை செல்வம் ஆகியோரை விருதுநகர் போலீசார் தேடி வருகின்றனர் .இந்த சம்பவம் கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் : கணேஷ்நாத் - விருதுநகர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, Crime News, Dindigul, Kodaikanal, Local News, Madurai, Virudhunagar