திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக முக்கிய நகர்ப்பகுதிகள், மற்றும் குடியிருப்பு பகுதிகளில் காட்டெருமைகள் உலா வருவதும் பொதுமக்களையும் விவசாயிகளையும் அச்சுறுத்துவதும், விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளையும்,வளர்ப்பு பிராணிகளையும் தாக்குவதும் தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில் அதிகாலை வேளையில் அதிகம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூடும் இடமான ஏரிச்சாலை மற்றும் பியர்சோழா சாலைகளில் திடீரென்று ஒற்றை காட்டெருமை உலா வந்ததால்,சாலையில் பயணித்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுனர்களும் அச்சம் அடைந்தனர்.
வாகனங்களை இயக்க முடியாமலும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாமலும் அவதியடைந்தனர்.இதனால் சிறிது நேரம் அப்பகுதி பரபரப்பாகவும் காணப்பட்டது.
நகர்ப்பகுதிகளில் காட்டெருமை உலா வருவதை புதிதாக காணும் சுற்றுலா பயணிகள் அதனை புகைப்படம் மற்றும் செல்பி எடுப்பதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை வனத்துறையினர் கவனம் செலுத்தி மனித விலங்கு மோதல் ஏற்படும் முன் காட்டெருமைகள் நகர் பகுதிக்குள் உலா வருவதை கட்டுப்படுத்த நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
செய்தியாளர்- ஜாபர்சாதிக் ( கொடைக்கானல்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dindigul, Kodaikanal, Local News, Tamil News