கொடைக்கானலில் முக்கிய தபால்களை ஆற்று ஓடையில் வீசி சென்ற பெண் பணியாளர் பணியிடை நீக்கம்...
கொடைக்கானலில் முக்கிய தபால்களை ஆற்று ஓடையில் வீசி சென்ற பெண் பணியாளர் பணியிடை நீக்கம்...
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மாலதி
Kodaikanal | கொடைக்கானலில் முக்கிய தபால்களை உரியவர்களிடம் சேர்க்காமல் ஆற்று ஓடைப்பகுதியில் வீசி சென்ற பெண் பணியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செண்பகனூர் அருகே சாலையோரத்தில் உள்ள ஓடையில் ஆதார் அட்டைகள், பான் கார்டுகள், அரசு பணிகள் குறித்த தபால்கள், நகைக்கடன் ஏலம் குறித்த தபால்கள் உள்ளிட்ட முக்கிய பதிவு தபால்களை அதன் உரிமையாளர்களுக்கு கொடுக்காமல் குப்பை போல் வீசப்பட்டு கிடந்தது.
இதனை பார்த்த அந்தப் பகுதியில் சென்ற சிலர் இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த கொடைக்கானல் காவல்துறையினர் பிரதான மலைச்சாலையின் ஓடைப்பகுதியில் கிடந்த அனைத்து முக்கிய தபால்களையும் மீட்டு அதனை கொடைக்கானல் தபால் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட திண்டுக்கல் தலைமை தபால் நிலைய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அஞ்சல் நிலையத்தில் பணியாற்றும் பெண் பணியாளரான மாலதி(28) என்பவர் தபால்களை உரியவர்களிடம் கொடுக்காமல் அதனை ஓடைப்பகுதியில் வீசி சென்றது தெரியவந்தது,
அதனை தொடர்ந்து தென்மண்டல அஞ்சல் துறை தலைவர் பெண் பணியாளர் மாலதியை பணியிடை நீக்கம் செய்து அதற்கான உத்தரவு வழங்கப்பட்டதாகவும் தபால்நிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.