திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அகரம் பேரூராட்சி டி.அயம்பாளையத்தை சேர்ந்தவர் காளியப்பன் - பாக்கியம் தம்பதி. இவர்களுக்கு நந்தினி என்ற மகளும் சரவணக்குமார் (வயது 20) சிவா (வயது 17) ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். மகள் நந்தினி திருமணம் முடிந்து கணவர் வீட்டில் இருக்கிறார்.
காளியப்பன் அவரது மனைவி இரண்டு மகன்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். காளியப்பனுக்கு கஞ்சா பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. கஞ்சா போதையில் அடிக்கடி கிராமத்தில் உள்ள பொதுமக்களிடம் தகராறில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அதேபோல் நேற்றும் வழக்கம் போல் கஞ்சா போதையில் அவரது மனைவி பாக்கியம் மற்றும் மகன்களை ஆபாச வார்த்தைகளால் பேசியும் தாக்கவும் முயன்றுள்ளார் .
இதனால் ஆத்திரமடைந்த காளியப்பனின் மகன் சரவணக்குமார் தான் வைத்திருந்த கத்தியால் தனது தகப்பனாரை நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலே காளியப்பன் பலியானார்.
தகவல் அறிந்து அங்கு வந்த வேடசந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் துர்காதேவி, இன்ஸ்பெக்டர் பாலமுருகன், மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தில் இறந்து கிடந்த காளியப்பனை பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு தந்தையை கொலை செய்த மகன் சரவணக்குமாரை வேடசந்தூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
செய்தியாளர்: சங்கர் (திண்டுக்கல்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Dindugal, Murder case