தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகின்றன. இந்த நிலையில் தமிழகம் மற்றும் கர்நாடகா எல்லைப் பகுதியில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதியில் ஆங்காங்கே கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கலில் நேற்று வினாடிக்கு 9,500 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து தற்போது வினாடிக்கு 35,000 கன அடியாக உயர்ந்துள்ளது.
இதன்காரணமாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள மெயின் அருவி, சினி ஃபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிச் செல்கின்றன. இந்த நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக சுற்றுலாப் பயணிகள் பரிசலில் செல்ல அனுமதி வழங்கும் எனவும் அருவிகளில் குளிக்க மட்டும் மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வாய்ப்பு உள்ளது என தெரிகிறது.
தமிழக கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆங்காங்கே பெய்த கன மழையின் காரணமாக தற்போது ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: ஆர்.சுகுமாா், தருமபுரி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cauvery River, Dharmapuri, Water