காணும் பொங்கலையொட்டி தமிழ்நாடு முழுவதும் ஓவ்வொரு ஊரிலும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. எனினும் பல இடங்களில் வித்தியாசமான, விநோதமான போட்டிகள் எல்லாம் நடத்தப்பட்டன. அந்த வகையில் தருமபுரி மாவட்டம் முக்கல்நாயக்கம்பட்டி கிராமத்தில் நடந்த சுவாரஸ்யமான போட்டி இதுதான்.
ஒரு டேபிளில் சிறுவர்கள், இளைஞர்கள் அமர வைக்கப்பட்டனர். அவர்களுக்கு முன்பாக பிரியாணி பொட்டலம் ஒன்று வைக்கப்பட்டது. அதனை 5 நிமிடத்திற்குள் யார் சாப்பிடுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். போட்டியில் கலந்துகொண்ட இளைஞர்களும், சிறுவர்களும் போட்டிப் போட்டுக்கொண்டு பிரியாணி சுவைத்தனர். பிரியாணி சாப்பிடும் போட்டியில் ஆடவர் பிரிவில் கஜேந்திரனும், பெண்கள் பிரிவில் மகாலட்சுமியும் வென்றனர்.
இதுபோலவே 5 நிமிடத்தில் சிக்கன் 65 சாப்பிடுதல், அரை கிலோ ஐஸ்கிரீம் சாப்பிடுதல் என வித்தியாசமாக நடத்தப்பட்ட சாப்பாட்டு ராமன் போட்டி பார்த்தவர்களை விசில் அடிக்க வைத்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Biryani, Dharmapuri